இராணுவ வீரன்
“சென்று வருகிறேன் அம்மா”
“எப்படா வ்ருவாய்?”
“சீக்கிரமா வந்திடுவேன்” - மகன் கூறியது தாய்க்கு வெற்று ஆறுதலாகவே தோன்றியது. தாய்க்கு அவ்வளவாக இஷ்டம் இல்லை. பலரிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டவள் தான்! ஆனால் உள்மனதோ விரும்பவில்லை. எந்த தாய்தான் விரும்புவாள்? இருப்பினும் கடமையாயிற்றே! மகனின் வாழ்நாள் இலட்சியம் அல்லவா? அதனால் தடுத்து நிறுத்தவில்லை.
“எதுக்குடீ இப்படி சோகமா முகத்தை வச்சிருக்க? சந்தோஷமா வழியனுப்பி வையேன்”, என்றார் தந்தை.
“இந்த ஆண்களுக்கு மட்டும் எப்படி தான் மனம் வருகிறதோ? ஒரே மகனை அங்கே அனுப்பி வச்சுட்டு எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும்? போய்த் திரும்பி வந்தவர்கள் எத்தனை பேர்? இன்றைய சூழ்நிலையும் சரியில்லை. அங்கெல்லாம் நினைச்சா விடுமுறை கேட்டு வந்து பார்க்க முடியுமா? இத்தனை நாள் படாத பாடுபட்டு பிள்ளையை வளர்த்துவிட்டு இங்கே எதாவது கம்பெனியில் வேலை செய்வதை விட்டுட்டு…” தனக்குத் தானே புலம்பிக் கொண்டாள் தாய்.
“அம்மா, கவலைப்படாத, இது என்னோட நாடு. அடிக்கடி உனக்கு எழுதுவேன். உன்னோட பேசுவேன். சீக்கிரமா வந்துவிடுவேன். அப்பா வரேன்பா!” – என்று கூறி தன் அமெரிக்க இலட்சியம் நிறைவேறும் பூரிப்பில் விமானம் ஏறினான் இக்கால ‘போர் வீரன்’.
- வினோத்
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad. Your votes and comments are precious.
5 Comments:
Good start! Waiting to read more of you.
Good start. You might be interested in registering your blog at Thamizmanam. Here is the link.
Welcome Vinod !!!
Wow! Good one.. packed a punch:)
Hi Nitya,
Thanks a lot for your comments.
This was the story that I wrote as a student almost 5 years back.. Looks like the theme of the story will stand the test of time ;-)
Waiting for your comments on ஊழி too !!
-Vinodh
http://visai.blogspot.com
Post a Comment
<< Home