Monday, September 26, 2005

ஒளி இலக்கணம்

oli

உலகம் சற்று வித்தியாசமாகத் தெரிந்து கொண்டிருந்தது. நான்கு வாரங்கள் இருட்டில். இன்றுதான் மறுபடியும் உலகத்தை பார்த்தான் கண்ணன். இருளிலிருந்து ஒளி – ஒரு மாதம் தான், ஆனால் நிறைய வேறுபாடு இருப்பது போல் தோன்றியது. மருத்துவமனையில் இருந்து ஒரு நானூறு அடி தான் நடந்திருப்பான். இன்னமும் வெறும் கட்டிடங்கள் தான் சுற்றி இருந்தன. மேலே வானத்தைப் பார்த்தான். வானத்தின் நீல நிறம் அவன் கண்களை நிறைத்தது. கண்களை மூடினான்.

“இயற்கையில் நிறங்கள் என்று எதுவும் இல்லை. ஒளிக்கு நிறங்கள் கிடையாது. Light has no colors, the defining property of light is only its wavelength. ஒரு குறிப்பிட்ட wavelength ஒளி கண்களில் ஏற்படுத்தும் உணர்ச்சி தான் அந்த ஒளியின் நிறம். Yes, கண்களின் உணர்ச்சி தான் நிறங்கள். Colors are only perceptions of the eye, ஆனால் ஒளிப்பதிவாளர்களான உங்களுக்கு, இந்த நிறங்கள் தான் இன்றியமையாதவை. these perceptions are what matter most….”
கண்ணன் விருது பெற்ற ஒளிப்பதிவாளன். கல்லூரி காலத்தில் ஒளிப்பதிவு பாடத்தில் இயற்பியல் பேராசிரியர் இராமன் எடுத்த சிறப்பு வகுப்பில் கூறியவை கண்ணனின் காதில் இப்போது ஒலித்துக் கொண்டிருந்தது. கண்ணன் பாலத்தின் திசையில் நடந்தான். பாலத்தில் நின்றால், கீழே ஓடும் நகர நதியின் மணத்தை சற்று சகித்துக் கொள்ளத்தான் வேண்டும், ஆனால் நகரத்தின் தொலை தூரங்களை அங்கிருந்து பார்க்கலாம். பாலத்தை அடைய சாலையைக் கடக்க வேண்டும். காலை ஏழரை மணிதான். ஆனால் போக்குவரத்து சற்று அதிகமாக இருந்தது. Signal-இல் பாலத்தைக் கடப்பதே சிறந்தது என்று Signal வரை நடந்தான்.

சாலை கடப்போருக்கு பச்சை விழுந்திருந்தது. கண்ணன் சாலையில் கால் வைத்தான். ஆனால் ஒரு லாரி கிட்டதட்ட அவன் மேல் ஏறியிருக்கும். சிக்னலில் நிற்காமல் லாரி அவனை கடந்து சென்றது. கண்ணன் பின் வாங்கி மறுபடியும் கடக்க முற்பட்டான். இந்த முறை ஒரு கார். எந்த வாகனமும் நிற்பதாகத் தெரியவில்லை. வாகனங்களுக்கான signal-ஐ பார்த்தான். சிகப்பு விளக்கு. இருப்பினும் ஒரு வண்டியும் அதை மதிப்பதாக இல்லை. இப்போது சாலையின் நடுவில் திணறிக் கொண்டிருந்த கண்ணனை சுற்றி வண்டிகள் சென்ற வண்ணமாக இருந்தன. கண்ணனுக்கும் மயக்கமே வந்து விட்டது. கண்ணன் கிட்டதட்ட கீழே விழுந்திருப்பான். இப்போது சாலை கடப்போருக்கான பச்சை சிகப்பாக வேறு மாறிவிட்டது. ஆனால் அதிசயமாக அவன் முன் வந்து கொண்டிருந்த கார் நின்றது. மற்ற வாகனங்களும் அதன் பின் நின்றன். அவனுடைய பரிதாப நிலையைக் கண்டு நின்றிருக்க வேண்டும். அவசரமாக சாலையைக் கடந்தான்.

பாலத்தை நோக்கி நடந்தான். பாலத்தை அடைவதற்கு முன் நகர நதியின் மணம் அவனை அடைந்தது. சகித்துக் கொண்டு நடந்தான். பாலத்தின் மேல் ஒரு பெண் உள்பட, நான்கைந்து பேர் கொண்ட குடும்பக் கும்பல் நின்று கொண்டிருந்தது.. அந்த கும்பலில் ஒருவன் ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு பாலத்தின் ஒரத்தில் நின்று நதியைப் பார்த்துக் கொண்டிருந்தான். மற்றவர்கள் வேறு திசையைப் பார்த்து தமக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். குழந்தையைப் பார்க்க கண்ணனுக்கு பரிதாபமாக இருந்தது. குழந்தையால் இந்த நதியின் மணத்தைப் பொறுத்துக் கொள்ள முடியுமா என்று யோசித்தான். திடீரென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டிருந்தவன், தன் கையை பின் கொண்டு வந்து, வேகமாகத் தன் கையில் இருந்த குழந்தையை நதியின் திசையில் தூக்கி எறி…..இதைப் பார்த்து கொண்டிருந்த கண்ணன் ஒரு நொடி திக்கு முக்காடினான். வேகமாக அவனை நோக்கி தலை தெறிக்க ஓட, கால் தடுக்கி கீழே விழுந்தான்……

காவல் நிலையத்தில்….
“Inspector, It was gruesome, கொடுமை - அவன் தான் குழந்தையைத் தூக்கி ஆற்றில் வீசினான்”
“ஆனால் அவர் குழந்தை கை தவறி விழுந்துவிட்டது என்றல்லவா சொல்கிறார்”
“இல்ல சார், அவன் நடிக்கிறான். தூக்கி எறிஞ்சான், நான் பார்த்தேன்.”
“என்ன உடை அணிந்திருந்தார்?”
“பச்சை சட்டை”
“இங்கே வாங்க, என்ன சட்டை போட்டுருந்தீங்க?”
“இதே சட்டை தான் சார். சிகப்பு சட்டை”, என்று அழுது கொண்டே சொன்னான். குடும்பத்தின் மற்றவர்களும் ஒப்பு கொண்டனர்.
கண்ணன் அவன் போட்டிருந்த சட்டையைப் பார்த்தான். அதே சட்டை தான். ஆனால் அவன் கண்ணில் இப்போதும் பச்சையாகத் தெரிந்து கொண்டிருந்தது.
“இது பச்சை இல்லையா?” என்றான் கண்ணன். திடீரென கண்ணனுக்கு பொறி தட்டியது. காலையில் வாகனங்கள் அவனுக்கு பச்சை வந்த போது நிற்கவில்லை. அவனுக்கு சிகப்பு விழுந்த போது வண்டிகள் நின்றன்.

வெளியே வேகமாக ஓடினான். மரத்தைப் பார்த்தான். மரத்தின் இலைகள் சிகப்பாகத் தெரிந்து கொண்டிருந்தது. திரும்பி காவல் நிலையத்தைப் பார்த்தான். காவல் நிலையம் பச்சை நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. கண்ணனுக்கு இப்போது புரிந்தது.

பச்சை சிகப்பாகத் தெரிந்து கொண்டிருந்தது. சிகப்பு பச்சையாகத் தெரிந்து கொண்டிருந்தது.

*************

கண்ணன் அவசரமாக மருத்துவமனைக்குத் திரும்பி வந்தான்.
“Doctor, சிகிச்சைக்கு முன் என் பார்வை மங்கிக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது சிகிச்சையில் ஒரு பெரிய குளறுபடி நடந்திருக்கிறது. இப்போது சிகப்பு பச்சையாகத் தெரிகிறது. பச்சை சிகப்பாகத் தெரிகிறது. ஒரு கொலைகாரன் தப்பிவிட்டான்.” - கண்ணன் டாக்டரைப் பார்த்துக் கத்தினான்.

Dr.அறிவொளி கண்ணனின் கண்களை கிட்டதட்ட இரண்டு மணி நேரம் பரிசோதனை செய்தார்.

“கண்ணன், நான் சொல்வதை பதட்டம் இல்லாமல் கோபம் இல்லாமல் கவனமாகக் கேளுங்கள். நான் சொல்லப் போவது உங்களுக்கு நம்ப முடியாமல் இருக்கலாம், ஆனால் அது உண்மை. Actually your eyes are perfectly alright now. உங்கள் கண்களில் இப்போது எந்த பிரச்சனையும் இல்லை.”

“Are you joking?” – கண்ணன் சற்று கோபமாகவே கேட்டான்.

“இல்லை. நான் சொல்வது உண்மை. ஆனால் உங்கள் கண்ணில் இந்த Color perception பிரச்சனை சிகிச்சைக்கு முன் இருந்தது. அதை என் சிகிச்சை எதிர்பாராத விதமாக சரி செய்துள்ளது”

“என்ன??? எனக்கு சிகிச்சைக்கு முன்னாடி எந்த பிரச்சனையும் இருந்ததில்லை, மங்கல் பார்வையைத் தவிர”

“நான் உங்களுக்கு அறிவியல் விளக்கம் கொடுத்து புரிய வைக்க முடியும். ஆனால் அதற்கு நான் சொல்வதை நீங்கள் நிதானமாக கேட்க வேண்டும்”.

“சரி சொல்லுங்க பார்ப்போம்.”

“உண்மையில் ஒளிக்கு எந்த நிறமும் கிடையாது. நிறம் என்பது கண்களில் ஒளி ஏற்படுத்தும் வெறும் உணர்ச்சி தான்.”
அறிவொளி கூறியது பேராசிரியர் இராமன் கூறியதை நினைவுகூர்ந்தது.

“ஒரு தக்காளிப் பழத்தோலில் இருந்து வெளிப்படும் 650nm wavelength ஒளி கண்களில் ஏற்படுத்தும் உணர்ச்சியை சிகப்பு என்கிறோம். அதே போல் கிளியின் உடம்பிலிருந்து வெளிப்படும் 510nm wavelength ஒளி கண்களில் ஏற்படுத்தும் உணர்ச்சியை பச்சை என்கிறோம். என் கண்ணில் இந்த wavelength ஒளி என்ன உணர்ச்சி ஏற்படுத்துகிறது என்று உங்களுக்குத் தெரியாது. உங்கள் கண்ணில் இந்த wavelength ஒளி என்ன உணர்ச்சி ஏற்படுத்துகிறது என்று எனக்குத் தெரியாது. ஒத்துக் கொள்கிறீர்களா?”
“சரி, தொடருங்கள்”
“ஆனால் கிளி பச்சை என்று நமக்குத் தெரியும். ஆதலால் நம் கண்ணில் கிளியின் ஒளி என்ன உணர்ச்சி ஏற்படுத்துகிறதோ, அதை பச்சை என்கிறோம். உங்களுக்கு பிறந்ததிலிருந்து உங்கள் கண்ணின் அமைப்பு, கிளியின் ஒளியை நாங்களெல்லாம் உணரும் சிகப்பு நிறமாக காட்டிக் கொண்டிருந்தது. அதே போல் தக்காளியின் ஒளி நாங்களெல்லாம் உணரும் பச்சை நிறத்தை உங்கள் கண் உங்களுக்கு காட்டிக் கொண்டிருந்தது. ஆனால் எந்த குழப்பமும் ஏற்படவில்லை. கிளி சிகப்பாக உங்கள் கண்ணில் தெரிந்தாலும், அதை நீங்கள் பச்சை நிறம் என்று நினைத்திருந்தீர்கள். தக்காளியும் நெருப்பும் உங்கள் கண்ணில் பச்சையாகத் தெரிந்தாலும், அதை நீங்கள் சிகப்பு என்று குறிப்பிடுவதால் எந்த குழப்பமும் இல்லை”
“I cant believe this.”
“I understand your feelings. ஆனால் அதுதான் உண்மை. இப்போது கண்ணில் நான் செய்த சிகிச்சையில் Retina செல்களை மாற்றி இருப்பதால், எல்லோரைப் போல் உங்கள் பார்வையை மாற்றிவிட்டோம். இப்போது கிளியும் புல்லும் உங்கள் கண்களில், எல்லோரும் உணரும் பச்சை நிறத்தில்தான் இருக்கும். அதே போல் தான் ஆப்பிளின் நிறமும் நாங்கள் உணரும் சிகப்பில் இருக்கும். இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் உலகு தான் நாங்கள் இத்தனை நாள் வரை பார்த்த உலகம்.”
“அப்படியானால், ஒரு ஒளிப்பதிவாளனாக நான் பார்த்த உலகமும் என் ஒளிப்பதிவில் காட்டிய உலகமும் வேறா?”
“Yes, Incredible, but true. Truth sometimes sounds like a fantasy, doesn’t it? In fact you are the first diagnosed and cured case of this color swap disorder.”
“இப்போது என் பிரச்சனைக்குத் தீர்வு என்ன?”
“நீங்கள் சிகப்பு என்று நினைக்கும் நிறத்தை பச்சை என்று அழையுங்கள். பச்சை என்று நினைக்கும் நிறத்தை சிகப்பு என்று அழையுங்கள். கலப்பு நிறங்களுக்கு புது சொற்களைக் கற்றுக் கொள்ளுங்கள். Don’t worry, it is only a terminology confusion!
கண்ணன் யோசித்தான். பிரச்சனை சிகிச்சைக்கு முன் ஏற்பட்டிருந்தால், டாக்டரின் அறிவியல் விளக்கம் சரிதான். ஆனால் அவருடைய சிகிச்சையினால் ஏற்பட்டிருந்தால்? புல்லினை உலகம் பார்க்கும் நிறம், நான் பார்த்த முந்தைய நிறமா? பார்க்கும் இப்போதைய நிறமா? எதுவாக இருந்தாலும் இனி இது வெறும் சொல் பயன்பாட்டு பிரச்சனை, yes, a problem of terminology.

கண்ணன் வெளியே சென்றான். செம்புல் தோட்டங்களும், பைங்கல் கட்டிடங்களும், கைக்குழந்தை கொலைகாரர்களும். உலகம் வித்தியாசமாகத் தான் இருந்தது.

-வினோத்
பி.கு: இக்கதை தினமலர் "அறிவியல் அயிரம் & டாட் காம்" பகுதியில் குறிப்பிடப்பட்டது. நன்றி தினமலர்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. Your votes and comments are precious.

Thursday, September 15, 2005

Phone-A-Friend

“Phone-A-Friend” – என்றான் மதி பதட்டம் தென்பட்ட நடுங்கிய குரலில், சற்று அதிகமாகவே வியர்த்திருந்த முகத்துடன்.

கூட்டத்தின் வியப்பொலி அரங்கத்தை அதிர வைத்தது.

ஆட்டத்தின் முதல் துருப்புச் சீட்டை மதி பயன்படுத்தியிருந்தான்.
கேள்வியின் எண் 15 – ஒரு கோடி ருபாய்க்கான கடைசி கேள்வி.

இதுவரை மதி எந்த துருப்புச் சீட்டையும் பயன்படுத்தவில்லை. யாருடைய உதவியும் தேவை இல்லாதவன் போலல்லவா ஆடிக்கொண்டிருந்தான்! ஒவ்வொரு கேள்விக்கும் செருக்கும், திமிரும் கலந்த தோரணையில் சரியான விடைகள்! தன்னுடைய ஆட்டத்தின் மூலமாக பார்வையாளர்களுக்கு கடுப்பும் களிப்பும் ஒரு சேர ஏற்படுத்தி இருந்தான் மதி. மதியின் நினைவாற்றலையும் அறிவையும் கண்டு, போட்டியின் நடத்துனராக விளங்கிய இந்தியாவின் பெருநடிகர்கூட பெரும் வியப்பில் தான் இருந்தார்.

இறுதிக் கேள்வியின் போது மதி துருப்புச் சீட்டைப் பயன்படுத்துவதை பார்வையாளர்களால் நம்ப முடியவில்லை. உண்மையில், மதி பதிலளித்த விதம், மதிக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே ஒரு ஊடல்-கூடல் உறவினை ஏற்படுத்தியிருந்தது என்றால் மிகையாகாது. எடுத்துக்காட்டாக, சற்று நேரம் முன்னர், ஐந்தாவது கேள்வியின் போது மதி கூறியது அவனுக்கு பார்வையாளர்கள் மத்தியில் ஆதரவாளர்களை உருவாக்கவில்லை.

கேள்வி:
குடியரசு இந்தியாவுடன் கடைசியாக இணைந்த பகுதி எது?
A) கோவா, தாமன் மற்றும் தையு
B) தாத்ரா நகர் மற்றும் அவேலி
C) சிக்கிம்
D) புதுவை

மதி சற்று யோசித்ததைப் பார்த்து உயர பெருநடிகர்,
“உங்களிடம் இன்னமும் மூன்று துருப்பு சீட்டுகள் உள்ளன, நண்பரிடம் தொலைபேசலாம், 50-50, இல்லையேல் இதோ பார்வையாளரிடம் கேட்கலாம்” என்றார்.
“எனக்கே தெரியவில்லை என்றால் பார்வையாளர்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதாவது உருப்படாத இந்தி சினிமா கேள்விக்கு வேண்டுமானால் அவர்கள் பதில் சொல்லுவார்கள்”, என்றான் மதி இந்தியில், கூட்டத்தின் கோபக் கூக்குரலுக்கு இடையே.

உண்மையில் பெருநடிகருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“என்னையும் என்னைப் போன்ற ஏராளமான கலைஞர்களை உருப்பட வைத்த இந்தி சினிமாவைப் பற்றி இப்படி சொல்கிறீர்களே, மதி. இருந்தாலும் இந்தி சினிமாவைப் பற்றி உங்களுடைய கருத்தை வெளிப்படையாக சொன்னதுக்கு நன்றி” என்று சிரித்துக் கொண்டே தன் கம்பீரத் தோரணையில் சமாளிக்கப் பார்த்தார். “சரி என்ன பண்ணலாம் என்று இருக்கிறீர்கள், பார்வையாளர் உதவி வேண்டாம் என்றால்?”. நிதானமாக யோசித்து “99% நம்பிக்கையுடன்” பதிலளிப்பதாகக் கூறி ஒரு விடையைத் தந்தான்.
“சிக்கிம், 1975இல்”.
அது நூறு விழுக்காடு சரியாக இருந்தது.

உண்மையில் ஐந்தாவது கேள்வி வரை கூட்டம் மதிக்கு அமோக அதரவு அளித்து வந்தது. காரணம், மதி தன்னை பற்றிக் கொடுத்த அறிமுகமும், அவனது திட்டமும். “உழவன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மதி, இந்திய அறிவியல் நிறுவனத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் மரபணு உயிரியலில் முதுநிலை பட்டம் பெற்றவன்!

“வானம் பார்த்த காய்ந்த நிலங்களையும், நிலங்களின் விளைவைப் பார்த்த காய்ந்த வயிறுகளையும் கொண்ட ஒரு மறக்கப்பட்ட ஊர் என்னுடைய ஊர், செங்கதிர்” என்று மதி சொன்னது அங்கிருந்த பல காய்ந்த கண்கள் ஈரமடையச் செய்தது. இந்தியாவை மிதிவண்டியில் சுற்றி எதேனும் நான்கு எல்லைகளில் கால் பதிப்பதைத் தன் “சின்னப் பேராசை”யாகக் கொண்ட மதி, ஆய்வுப் படிப்பிற்கு சியாட்டில் செல்லாமல், செங்கதிரில் தங்கி தன் ஊரை வறுமையின் பிடியில் இருந்து விடிவிக்க தான் முயற்சிப்பதாக சொன்னபோது, கூட்டம் எழுந்து நின்று கைதட்டியது.

“நான் இந்த போட்டியில் ஒரு கோடி ஜெயிக்கத் தான் விளையாடுகிறேன். எனக்காக இல்லை இந்த பணம். என் ஊரின் முன்னேற்றத்துக்காக நான் வைத்திருக்கும் திட்டங்களுக்கு ஒரு கோடி கண்டிப்பாகத் தேவை” என்று திட்டவட்டமாக அறிவித்தான். அடிப்படை வசதிகளும் பணபுழக்கத்தைத் திரும்ப ஏற்படுத்தும் ஒரு வணிகச் சூழலை உருவாக்கப் போவதாக கூறினான்.

“செங்கதிரின் விடியலுக்கு இந்த ஒரு கோடி” என்று மதி கூறிய வார்த்தைகள் பலருக்கு புல்லரிப்பு ஏற்படுத்தினாலும், அவன் வார்தைகளில் கொஞ்சம் திமிரும் செருக்கும் கலந்திருப்பதாகவே சிலருக்குப் பட்டது. ஐந்தாவது கேள்வியின் போது அவன் கூறியது அதனை உறுதி செய்தது.

ஆனால் கூட்டத்தின் கோபம் நிரம்ப நேரம் நீடிக்கவில்லை. பத்தாவது கேள்வி வரும் போதே, மதியின் விடைகள் அவனது அறிவாற்றலை அனைவருக்கும் உணர்த்தியது. அவனது உயர்ந்த நோக்கத்தை நினைவுகூர்ந்த கூட்டம் மறுபடியும் அவன் பக்கம் சாய்ந்தது. பதினைந்தாவது கேள்விக்கு முன் “மதி, மதி” என்று கூட்டம் அவனுடைய பெயரைக் கத்திக் கொண்டிருந்தது.

கேள்வியை பெருநடிகர் படிக்க, திரையில் தோன்றியது.
தன்னுடைய மருத்துவ படிப்புக்கு நடுவே, இவர் “Le Pedorasa” என்ற தன்னுடைய மோட்டர் சைக்கிளில் தன் கண்டம் எங்கும் பயணம் செய்தார். இவர் மேற்கொண்ட பயணம், பிற்காலத்தில் நிகழ இருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றங்களுக்கு வித்தாக அமைந்தது. இவர் யார்?
A) Diego Rivieria
B) Che Guevera
C) Lech Walesa
D) Fidel Castro

“உங்களுக்கு நினைவுபடுத்தக் கூறுகிறேன் – இன்னமும் மூன்று துருப்பு சீட்டுகளும் அப்படியே இருக்கின்றன. விலகினால் 50 இலட்சம் உண்டு – ஆனால் செங்கதிருக்கு 1 கோடி தேவை என்று ஏற்கனவே கூறிவிட்டீர்கள். சந்தேகம், குழப்பம் இருந்தால், துருப்பு சீட்டுகளை பயன்படுத்துங்கள்”.

மதி கண்டிப்பாக பார்வையாளர் பதிலைக் கேட்கமாட்டான் என்று அனைவருக்கும் தெரியும். என்ன இருந்தாலும், பதினைந்தாம் கேள்வி என்றைக்குமே பார்வையாளர் கேள்வி கிடையாது. மதி நிரம்ப நேரம் கழித்து தன் முதல் துருப்புச் சீட்டை பயன்படுத்தினான்.
“யாரை அழைக்க விரும்புகிறீர்கள்?” என்றார் பெருநடிகர் தன் கணீர் குரலில்.
“குமாரசாமி from செங்கதிர், என்னோட அப்பா” என்றான்.

“குமாரசுவாமிஜி, मै ... बोल रहा हू, कौन बनेगा क्रोरपति से|”
“யார் நீங்க, உங்களுக்கு யாருங்க வேணும்?”
“Sir, he does not know hindi”.
“That’s okay Madhi, but I do know tamil. ரஜினிகாந்த், கமல்ஹாசன், நம்ம தோஸ்த். Your father has asked me something. யார் நீ, Who are you? That’s the question, correct? In fact I am quite pleased to answer his question, for the question is something that I am not often asked, atleast in these parts of the world. Let me give a brief bio – நான் உருப்படாத இந்தி சினிமாவில் ஒரு உருப்படாத நடிகர்.”
கூட்டம் சிரித்தது. மதி சிரிக்கவில்லை, அவன் இன்னமும் கேள்வியில் மூழ்கி இருந்தான். பதட்டத்துடன் நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தான்.
“என்ன புள்ளே சார் பெத்தர்கீங்க, என்ன answer சொல்றார்? என்ன பெரிய thoughts? நான் உங்கள சல்யூட் பண்றேன்! அரே வா” என்றார் நெகிழ்ச்சியுடன் குமாரசாமியிடம்.
“இப்ப உங்க பையன் உங்க help கேட்கறார், 50 lakhs win பண்ணிருக்கார்,செங்கதிர் needs another 50 lakh, அது உங்க கையிலே. Your time starts now!” என்று விரலசைத்தார்.

“எப்படிடா இருக்க மதி?”
“நல்லா இருக்கேன்பா, இதோ கேள்வி”
மதி கேள்வியைப் படிக்கத் தொடங்கினான். அவன் குரலின் நடுக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.


கேள்வியைப் படித்து முடிப்பதற்குள் 15 விநாடிகள் முடிந்துவிட்டன். மதி தொடர்ந்தான்.

“நான் இந்த கேள்வியை உங்க பதிலுக்காக கேட்கல. உங்ககிட்ட பேசணும் போல இருந்தது. என்னாலயே நம்ப முடியலப்பா. செங்கதிருக்கு விடியல் பொறந்தாச்சுப்பா. எனக்கு இந்த கேள்விக்கும் பதில் தெரியும்பா. MotorCycle Diaries. விடை Che Guevera.” என்று மதி தழுதழுத்தக் குரலில் சொல்லி முடிக்க, கூட்டம் மறுபடியும் எழுந்து நின்று கை தட்டத் தொடங்கியது.

“உங்கள் பதிலில் நம்பிக்கை தெரிகிறது. Lock செய்யலாமா?” என்றார் பெருநடிகர் தன் அதிரும் குரலில், மின்னும் வியர்வை முகத்துடன் அமர்ந்திருந்த மதியைப் பார்த்து.
-வினோத்
பி.கு: KBCயின் முன்னொடியான Who wants to be a millionaire? நிகழ்ச்சியின் முதல் Millionaire-ஆன John Carpenter வெற்றி பெற்ற நிகழ்ச்சியின் சம்பவங்களைத் தழுவி எழுதப்பட்ட கற்பனைக் கதை இது. John Carpenter வருமான வரி அதிகாரி, ஆதலால் கூட்டத்தின் ஆதரவு இல்லாமல் ஆடினார். தன் முதல் Lifeline- Phone-A-Friendஐ ஆட்டத்தின் கடைசி கேள்வியின் போது பயன்படுத்தித் தன் தந்தைக்கு தன் வெற்றியை அறிவித்தார்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. Your votes and comments are precious.